"தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 18

   "FOOD HABITS OF TAMILS" PART-18 / "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது"  / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing"   [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

 


சிந்துவெளியில் காணப்படும் வீடுகளில் தனி சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. அங்கு, வீடுகளின் சமையல் அறையின் வாசல் முற்றத்தை அண்டி இருந்தன. அவை செங்கல்களால் கட்டப் பட்ட அடுப்பை கொண்டிருந்தன. அங்கு பலவித மண் பாண்டங்கள், வெவேறு அளவிலும் வெவ்வேறு வடிவத்திலும் காணப்பட்டன. பெரும் பாலான மண்பாண்டம் சக்கரத்தை சுற்றி வார்தெடுக்கப் பட்டவை. அவை நேர்த்தியான மற்றும் வழுவழுப்பான தோற்றம் உள்ளவையாகவும், அதே நேரம் அவை சுடப் பட்டதால் நல்ல வலிமையாகவும் இருந்தன. அது மட்டும் அல்ல அவை கருப்பு அல்லது சிவப்பு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. இவை கிண்ணம், குவளை, கோப்பை, தட்டு, பெரிய அகலமான பாத்திரம், ஜாடி போன்றவையாகும். அத்துடன் செம்பு, வெள்ளி, ஈயம் போன்றவையால் செய்யப்பட்ட பாத்திரங்களும் தோண்டி எடுக்கப் பட்டன. அவை பணக்கார குடும்பங்களால் பாவிக்கப் பட்டு இருக்கலாம். சிந்து வெளி மக்கள் தமது சமையலுக்கு எண்ணெயுடன் மற்றும் இஞ்சி, உப்பு, பச்சை குடைமிளகாய், மஞ்சள் தூள் போன்றவை பாவித்தனர்.என்றாலும் அவர்கள் நாளாந்த வாழ்க்கையில் அல்லது ஏதாவது ஒரு சிறப்பு தினத்தில் அல்லது ஆண்டவனுக்கான காணிக்கையில் அல்லது படையலில் எப்படியான உணவு சமைத்தார்கள் என்பதோ அல்லது அவையின் பெயரோ எமக்கு இன்னும் தெரியாது. ஆனால் அவையின் சேர்மானங்கள், அதாவது என்ன என்ன சேர்க்கப்பட்டன என்பதை நன்றாக அறியக் கூடியதாக உள்ளது. மெஹெர்கரில் [Mehrgarh] நடைபெற்ற அகழ்வு ஆராச்சியில், அரைக்கும் கற்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அவை கோதுமை, பார்லி போன்றவை அரைக்கப் பாவிக்கப் பட்டு இருக்கலாம். எனவே, அவர்கள் மாவை பாவித்து அதிகமாக ரொட்டி போன்ற ஒரு உணவை சமைத்து இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அதே போல ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் யந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல்கருவியும் கிடைத்துள்ளன. இந்த அம்மி இன்னும் இந்தியா, இலங்கை நாடுகளில் பாவனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடுகு, கொத்த மல்லி, போன்ற வாசனைத் திரவியம் பாவித்தார்கள் என்பதை உறுதிப் படுத்துகிறது. அங்கு கண்டு பிடிக்கப் பட்ட மட்பாண்ட சமையல் பாத்திரங்கள், அவர்கள் கொதிக்க வைத்தும் வேக வைத்தும் சமைத்ததை காட்டுகிறது. அத்துடன் எரிந்த எலும்பு எச்சங்கள், அவர்கள் இறைச்சியை சுட்டு சமைத்ததை - பார்பிக்யூ [BBQ] மாதிரி - எடுத்து காட்டுகிறது. மேலும் அங்கு தந்தூரி அடுப்பை போன்ற ஒன்றும் கண்டு பிடிக்கப் பட்டது. இது அதிகமாக இன்றைய தந்தூரி அடுப்பின் பழைய வடிவமாக இருக்கலாம்? அன்றைய நாளாந்த வாழ்விற்கு அடிப்படை உணவான ரொட்டி செய்ய அது பாவிக்கப் பட்டு இருக்கலாம். மேலும் கி மு 3000 ஆண்டை சேர்ந்த, தானியங்களை அரைப்பதற்க்கான மேடையும் ஹரப்பாவில் காணப்பட்டது. இது பெரும் அளவில் மா அரைத்து ரொட்டி செய்ய, நகரங்களுக்கு வழங்கியதை காட்டுகிறது. இந்த நாகரிகம் மிகவும் மேம்பட்டது. இதனால், இவர்கள் உடலிற்கு ஏற்ற தகுந்த உணவின் முக்கியத்தை கட்டாயம் அறிந்து இருக்கலாம் எனவும் நாம் நம்பலாம்.

 


கறி (Curry) பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை - வெங்காயம், இஞ்சி, மஞ்சள், உள்ளி, குடைமிளகாய், மிளகாய், கொத்த மல்லி, சீரகம், மற்றும் இது போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும். இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்து சம வெளி மக்கள், தமது உச்ச நாகரிக கட்டத்தில், மூன்று முக்கிய சேர்மானங்களான - இஞ்சி, உள்ளி, மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய - கறி சமைத்துள்ளார்கள். மேற்கு தில்லி [west of Delhi] பகுதியில் அமைந்த பண்டைய கி மு 3000 ஆண்டை சேர்ந்த சிந்து வெளி நாகரிக நகரமான பார்மானவில் [Farmana] தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பின் பல்லையும் சமையல் பானையில் ஒட்டியிருந்த எச்சங்களையும் பரிசோதித்ததில், தொல்பொருள் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் மஞ்சள், இஞ்சிக்கான அடையாளத்தை கண்டுள்ளார்கள். வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், வான்கூவர், அமெரிக்காவின், தொல்பொருள் ஆய்வாளரான அருனிமா காஷ்யப் [Arunima Kashyap] அவர்களும், ஸ்டீவ் வெபரும் [Steve Weber] சேர்ந்து இந்த முன்னைய கறியை கண்டு பிடித்தனர். அவர்கள் மேலும் பகுதியாக எரிந்த பூண்டு உள்ளியும் அங்கு கண்டார்கள்.மற்றும் ஒரு சான்றாக, இஞ்சியும் மஞ்சளும், ஹரப்பாவில் தோண்டி எடுக்கப்பட்ட மாட்டின் பல்லிலும் கண்டனர். கால் நடைகள் ஏன் கறி மாதிரி ஒரு உணவை உண்டான என்பது சரியாக புரியாவிட்டாலும், ஸ்டீவ் வெபர் அதற்கு ஒரு நியாயம் கற்பிக்கிறார். இன்றும் இந்த பகுதிகளிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மக்கள் தாம் சாப்பிட்ட உணவின் மிகுதியை தமது வீட்டிற்கு வெளியே அங்கும் இங்குமாக திரியும் மாடுகளுக்கு போடுகின்றனர். அது போல முன்பும் நடந்து இருக்கலாம் என்கிறர். ஹரப்பன் இடிபாடுகளில் வீட்டுக் கோழி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப் படுகின்றன. இது ஒரு வேளை, அங்கு கண்டு பிடித்த தந்தூரி போன்ற அடுப்பில் சமைக்கப்பட்டு இருக்கலாம். சோறு இல்லாமல் கறியா என்று நீங்கள் ஜோசிக்கலாம்? அப்படித்தான் பல தொல்பொருள் ஆய்வாளர்கள் நினைத்தார்கள். சிந்து வெளி மக்கள் ஓர் சில தானியங்களுக்கு மட்டும் - அதிகமாக கோதுமை, பார்லி போன்றவைக்கு மட்டும் கட்டுப் பட்டு இருந்ததாகவே கருதினர். ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் ஜெனிபர் பேட்ஸ் [Jennifer Bates] இதை மாற்றி அமைத்துள்ளார். அவர் இந்தியா - பிரித்தானியா கூட்டு குழுவுடன் சேர்ந்து, மேற்கு தில்லி பகுதியில் ஆய்வு செய்யும் போது, அங்கு சிந்து வெளி மக்கள் அரிசி, பயறு, பாசிப் பயறு உட்பட பல தானியங்கள் பயிரிட்டது தெரிய வந்தது. ஆகவே கறி உலகின் மிகவும் பிரபலமான உணவு மட்டும் இன்றி, அது மிகப் பழைய தொடர்ந்து பாவனையில் இருக்கும் ஒரு உணவும் ஆகும்.

 


நீங்கள் ஒரு பாரம்பரிய தமிழ் அல்லது இந்திய மதிய அல்லது இரவு உணவு ஒன்றை சாப்பிடுகிறீர்கள் என்றால் அங்கு கட்டாயம் இஞ்சி, மஞ்சள், பருப்பு இருக்கும். அத்துடன் சோறு அல்லது தினையும் அதிகமாக முடிவில் வாழைப் பழமும் இருக்கும். அப்படியானால், நாம் இன்று சாப்பிடும் உணவு, எம் முதாதையர் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவிற்கும் பெரும் வேறுபாடு கிடையாது எனலாம். இனி "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்" பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 19 தொடரும்

 👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-soon 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:  

 

"FOOD HABITS OF TAMILS" PART: 18

"Food Habits of Ancient Indus valley people or Harappans continuing"

 


Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Food in Indus Valley civilization was made in the utensils which included earthenware of various kinds. shapes and in a range of sizes. Most of the potteries were wheel made with fine and smooth appearances that were baked to give it strength. The potteries were painted with black or dark red slips. Such painted potteries included bowls, beakers, goblets, dishes, basins, saucers stands and jars. The excavations also include a number of vessels which are made up of Copper, silver, and lead. may be for in wealthy households. The Indus Valley peoples may be cooked with oils, ginger, salt, green peppers, and turmeric root, which would be dried and ground into an orange powder. We don't know the name of dishes they cooked in day to day life or for any special occasions or for any religious offerings in their kitchens because, mainly, we are still not able to read their language and also we are not found any literature, such as poems or written long records about their activities as Sumerian did. But we know the ingredients of their dishes and we know it very well. Also excavations in Mehrgarh have revealed grinding stones which is used in grinding wheat & barley so we can deduce that they used flour and maybe they know how to prepare Roti etc. In Harappa too they found hard stone - roller - grinders [Ammi], the design of which is still found all over India & Sri Lanka, confirm the use of spices. Also finding of pottery cooking vessel, may be used for boiling & stewing. Further charred bone remains show that they cooked meat by grilling. Also a small metre - high clay oven, instead of having a side - entry, this egg - shaped vessel's entry hole was at the top, which was narrower than its centre point. It was the ancestor of today's tandoori oven and may be used for bread - making, something fundamental to daily existence. Also Platform For Grinding Grains found at Archaeological Site Of Harappa, Indus Valley Civilization, belongs to 3rd Millennium BC, prove that they grind corn on the platforms for the city's supply of bread. This civilization was highly developed and thus many historians believe that they knew about importance of proper diet in life.

 


What is curry? The term likely derives from kari, the word for sauce in Tamil, a Dravidian language. A curry, as the Brits defined it, might be A mixture of onion, ginger, turmeric, garlic, pepper, chilies, coriander, cumin, and other spices cooked with shellfish, meat, or vegetables. But the original curry predates Europeans’ presence in India & Sri Lanka by about 4,000 years. Villagers living at the height of the Indus civilization used three key curry ingredients — ginger, garlic, and turmeric — in their cooking. This proto - curry, in fact, was eaten long before Brits defined it .But thanks to technological advances, scientists can now identify minute quantities of plant remains left behind by meals cooked thousands of years ago. It is no easy task; researchers must gather crumbling skeletons and find ancient dirty dishes before using powerful laboratory microscopes to pinpoint the ingredients of ancient meals. Examining the human teeth and the residue from the cooking pots, [from the late third millennium B.C ancient town of Farmana, west of Delhi] archaeologists, & scientists spotted the tell - tale signs of turmeric and ginger, two key ingredients, Even today, of a typical curry. Archaeologist Arunima Kashyap at Washington State University Vancouver, who, along with Steve Weber, made the recent proto-curry discovery. They also found a carbonized clove of garlic. They found additional supporting evidence of ginger and turmeric use on ancient cow teeth unearthed in Harappa, one of the largest Indus cities, located in Pakistan west of the border with India. Why would cattle be eating curry - style dishes? Weber notes that in the region today, people often place leftovers outside their homes for wandering cows to munch on. The Harappan ruins also contain evidence of domesticated chickens, which were likely cooked in those tandoori - style ovens and eaten. And what would a proto - curry be without a side of rice? Many archaeologists once thought that Indus peoples were restricted to a few grains like wheat and barley. But Cambridge University archaeologist Jennifer Bates, part of a joint Indian - U.K. team, has been examining the relative abundance of various crops at two village sites near today’s Masudpur, also west of Delhi. She found that villagers cultivated a wide array of crops, including rice, lentils, and mung beans. we now know that curry is not only among the world’s most popular dishes; it also may be the oldest continuously prepared cuisine on the planet.

 

If you are having a proper Tamil or Indian lunch or dinner, there is good chance that your food will contain ginger or turmeric or lentils. You have rice or millet and maybe even a banana to top it off. If so, the food that we eat today is no different from the ones eaten by our ancestors who lived in the Indus - Saraswathi region, 4500 years back. Let us now look at the "food habits of ancient Sangam Tamils".

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 19 WILL FOLLOW…

 

உடல்நலம்: காற்று வெளியேற வைக்கும் 8 உணவுகள்: 'பின் விளைவுகள்' ஆபத்தானவையா?


உங்கள் உடலில் காற்றுப் பிரிகை நிகழ்வது மிகவும் இயல்பானதுதான். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 5 லிருந்து 15 முறை வாயு வெளியேறும்.

உங்களுக்கு உண்டாகும் சிறு அசௌகரியங்கள் மற்றும் சங்கடங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மனித உடலிலிருந்து காற்று வெளியேறுவது என்பது நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்பதையே குறிக்கும்.

மனித உடலில் இருந்து காற்று வெளியேறக் காரணமான உணவுகள் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவுபவை.

கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிகுந்த சில உணவுகளை உங்கள் உடலின் செரிமான மண்டலத்தால் உடைத்து நுணுக்க முடியாது.

ஆனால் செரிமான மண்டலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த வேலையை திறம்படச் செய்யும்.

சரி.. எந்தெந்த உணவுகள் உங்கள் உடலில் இருந்து அதிகமாக காற்று வெளியேறக் காரணமாக இருக்கின்றன.

காற்று வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன், எந்த சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்? அதற்கான பதில் இதோ.

ஆனால், அந்தப் பதிலை அறியும் முன்பு கட்டாயம் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த உணவுகள் காரணமாக அதிகம் காற்று வெளியேறுகிறது என்பதால் இவை உங்கள் உடலுக்கு தீங்கான உணவுகள் என்று பொருளாகாது. அனைத்தையும் போதுமான அளவில் உட்கொள்வதே உடல் நலத்துக்கு நல்லது.

 

காற்று வெளியேறக் காரணமாகும் 8 உணவு வகைகள்

1. கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள்

கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். இதன் காரணமாக இந்தக் உணவுகள் உங்கள் உடலுக்குள் நீண்ட நேரம் தங்கி இருக்கும். அப்பொழுது நொதித்து நுரைக்கும்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளில், கந்தகம் (சல்ஃபர்) உள்ள அமினோ அமிலமான மெத்தியோனைன் (methionine) இருக்கும்.

குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சல்ஃபரை ஹைட்ரஜன் சல்பைடு-ஆக மற்றும். இதுதான் நீங்கள் காற்றை வெளியேற்றும்போது முட்டை அழுகியது போன்ற துர்நாற்றம் உண்டாகக் காரணம். நீங்கள் உண்ணும் பிற உணவுகளின் மணத்தையும் இது மாற்றி விடுகிறது.

 

2. மொச்சை

மொச்சை மற்றும் பிற அவரை வகை பருப்புகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. அவற்றில் ராஃபினோஸ் (raffinose) என்ற ஒரு வகை சர்க்கரையும் இருக்கும். இந்த நுணுக்கமான வேதிப்பொருளை உடலால் மிகவும் சரியாகச் செரிமானம் செய்ய முடியாது. இந்த சர்க்கரை குடலுக்குள் செல்லும்போது, குடலின் நாளங்கள் சக்தி பெறுவதற்காக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும். இதன் விளைவாக ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் சல்ஃபர் வாயுக்களை உண்டாக்கும்.

இவை உங்கள் உடலில் இருந்து காற்றுப் பிரியக் காரணமாக அமையும்.

 

3. முட்டை

பெரும்பாலானவர்கள் நினைப்பது போல முட்டை நம்மில் பலரையும் காற்று வெளியேற்ற வைக்காது. ஆனாலும் சல்ஃபர் அதிகமாக இருக்கும் மெத்தியோனைன் அமினோ அமிலம் முட்டையில் இருக்கும்.

எனவே நீங்கள் முட்டை சாப்பிடும் பொழுது சங்கடம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உங்கள் உடலில் காற்று வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால், அவற்றுடன் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் அல்லது மொச்சை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

 

4. வெங்காய வகைகள்

வெங்காயம், வெள்ளைப் பூண்டு போன்றவற்றில் ஃப்ரக்ட்டன் (fructan) எழும் ஒருவகை கார்போஹைட்ரேட் உள்ளது.

ஃப்ரக்ட்டன் வகை கார்போஹைட்ரேட் வயிறு ஊதூதல் மற்றும் காற்றுப் பிரிகை அதிகமாக நிகழக் காரணமாக இருக்கும்.

 

5. பால் பொருட்கள்

மாட்டுப் பால் மற்றும் ஆட்டுப் பாலில் லேக்டோஸ் (lactose) வெறும் ஒரு வகை சர்க்கரை இருக்கும்.

உங்கள் வயிற்றுக்குள் காற்று அதிகமாக சேர்வதற்கு லேக்டோஸ் வழிவகுக்கும்.

உலக மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகிதம் பேருக்கு, லேக்டோஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாத, ஏதாவது ஒரு வகையில் சிறு பின் விளைவுகளைக் கொண்டுள்ளனர்.

பால் பொருட்கள் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் காற்றுப் பெருகி, வயிறு ஊதுதல் நடக்கும்.

 

6. கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்றவை

காற்றுப் பிரிகை அதிகம் நிகழ வைக்கும் ஃப்ரக்ட்டன் வகை கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஓட்ஸ், கோதுமை போன்ற தானியங்களில் அதிகமாக இருக்கும்.

எனவே இவற்றால் செய்யப்படும் ப்ரெட், பாஸ்தா, ஹோல்ஹ்ரெய்ன்உணவுகள் உள்ளிட்டவை உங்கள் வயிற்றில் காற்று அதிகமாகச் சேர்வதற்கு வழிவகுக்கும்.

அதுமட்டுமல்லாமல் கோதுமை, பார்லி, புல்லரிசி (நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும் ஒரு வகை சிறு தானியம்) போன்றவற்றில் க்ளூட்டன் (gluten) அதிகமாக இருக்கும்.

க்ளூட்டன் அதிகமுள்ள உணவை நீங்கள் உட்கொண்டால் அதற்கு பின்பு காற்றுப் பிரிவது அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

 

7. காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முளைப்பயிறு போன்ற உணவுகள்

காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முளைப்பயிறு உள்ளிட்ட உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இவற்றின் காரணமாக இந்த உணவுகளைச் செரிமானம் செய்வதற்கு உங்கள் உடம்புக்கு சற்று நேரம் ஆகும்.

இதன் காரணமாக உங்கள் குடல் நாளங்களில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த உணவுகளை தங்கள் ஆற்றலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும்.

பாக்டீரியாக்கள் இந்த உணவுகளை நுணுக்கும் போது காற்று உண்டாகும். இந்த வகை உணவுகளில் சல்ஃபரும் இருக்கும் என்பதால் காற்று வெளியேறும் பொழுது உண்டாகும் துர்நாற்றம் உங்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடத்தைத் தரலாம்.

 

8. சில வகை பழங்கள்

ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய் போன்ற பழங்களில் ஃப்ரக்டோஸ் எனும் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருக்கும். இவற்றோடு ஆப்பிள் பேரிக்காய் போன்ற பழங்களில் நார்ச் சத்தும் அதிகமாக இருக்கும் .

ஃப்ரக்டோஸ் அதிகமாக இருக்கும் பழங்களைச் செரிக்க வைப்பது சிலரது உடலுக்கு சற்று கடினமாக இருக்கும். உங்கள் உடலில் இருக்கும் செரிமான மண்டலம் இந்த ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரையை அவ்வளவு எளிதில் நுணுக்க முடியாது. இதன் காரணமாகவும் காற்று அதிகம் உண்டாகும்.

 

அதிமுக்கிய எச்சரிக்கை

காற்று வெளியேறுகிறது என்பதால் இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

ஏனென்றால் உங்கள் உடலில் இருந்து காற்று பிரியாமல் இருக்க வேண்டும் என்பதைவிட இவற்றின் மூலம் கிடைக்கும் சத்துகள் உடலில் சேர வேண்டும் என்பதே முக்கியம்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகளை நீங்கள் அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது தெரியவந்து திடீரென அதிகமான நார்ச்சத்து உள்ள பொருட்களை உட்கொண்டால் உடலுக்கு அசௌகரியமாக இருக்கும். தேவையற்ற 'பின்' விளைவுகளை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பது அவசியம்

ஒருவருக்கு மலச் சிக்கல் உண்டானால் வயிற்றில் உண்டாகும் காற்றின் அளவும் அதிகமாகும்.

மலச்சிக்கல் வரும் அபாயத்தை தவிர்ப்பதற்கு உங்கள் உடலில் போதுமான அளவு நீர் சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு குடலிலேயே உணவு தங்கியிருக்கும் பொழுது அது தொடர்ந்து நொதித்துக் கொண்டே இருந்து காற்றை உண்டாக்கும். அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை சகிக்க முடியாது.

இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் மறக்காமல் நீர் அருந்தவும். (அதற்காக உணவு உண்ண முடியாத அளவுக்கு அதிகமாக அல்ல.) நீர்ச்சத்து நாள் முழுவதும் உங்கள் உடலில் இருப்பதை உறுதி செய்யவும்.

 

குளிர்பானங்கள் - ஏப்பம், காற்று

நுரைத்து பொங்கும் வகையிலான குளிர்பானங்கள் காரணமாகவும் காற்றுப் பிரிகை நிகழலாம். இந்த வகை குளிர் பானங்களைக் குடித்தால் உங்களுக்கு ஏப்பம் வரலாம். அத்தோடு உங்களுக்கு வழக்கமாக நிகழும் காற்று வெளியேறும் அளவைவிட அதிகமாக காற்று உடலில் இருந்து வெளியேறும். சிவிங்கம் சாப்பிட்டாலும் இதே நிலைதான்.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் சூப் போன்ற நீர் ஆகாரங்களை ஸ்பூன் மூலம் குடித்தால், அவற்றை உறிஞ்சும் பொழுது உங்கள் உடலுக்குள் காற்றும் சேர்ந்துதான் உள்ளே செல்லும். உள்ளே சென்ற காற்று எப்படியாவது வெளியே வந்துதானே ஆக வேண்டும்?

 

காற்று அதிகம் வெளியேறுவதால் நீங்கள் கவலைப்பட வேண்டுமா?

பெரும்பாலான நேரங்களில் இதற்கான பதில் இல்லை என்பதுதான். ஆனால் சில நேரங்களில் மிகவும் அதிகமான அளவு காற்று வெளியேறுவது உங்கள் உடல் நலத்தில் ஏதாவது ஒரு கோளாறு இருப்பதை காட்டுகிறது.

எனவே அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரை அணுக வேண்டும். சில வகை மருந்துகளை உட்கொண்டாலும் கூட துர்நாற்றத்துடன் காற்று வருவதும் ஒரு 'பின் விளைவாக' இருக்கும்.

 

நன்றி-பிபிசி